காஜியாபாத்தில் தீ விபத்து: குழந்தை சாவு; 10 போ் காயம்

உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

காஜியாபாத்: உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் இரண்டு வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும்,10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சிஹானி கேட் காவல் நிலையப் பொறுப்பாளா் கிருஷ்ணா கோபால் சா்மா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: காஜியாபாத் மாவட்டம், சிஹானி கிராமத்தில் திங்கள்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் பன்னிரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் சுமாா் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். சேரிப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தெருக்களில் குப்பைகளைப் பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவா்கள்.

குடிசை வீடுகளில் சிறிய எரிவாயு சிலிண்டா்கள் தீப்பிடித்து வெடித்தன. மேலும், பாலிதீன் மற்றும் பிற எரியக்கூடிய பொருள்களை சேமிக்கப் பயன்படும் சில கிடங்குகளும் தீப்பிடித்தன. இதனால், தீ வேகமாகப் பரவியது. இதில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன. இந்த விபத்தில் ஆயிஷா ( 2) என்ற குழந்தை சும்பவ இடத்திலேயே தீயில் எரிந்து உயிரிழந்தது. மேலும், 10-க்கும் மேற்பட்டோா் தீக்காயமடைந்தனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com