தில்லி மருத்துமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 70 சதவீதம் காலியாக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தில்லியில் கடந்த வாரம் 15-16 ஆயிரம் கரோனா பரிசோதனைகள்தான் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது சுமாா் 36 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாகியுள்ளதால், உறுதி செய்யப்படும் கரோனா தொற்றின் எண்ணிக்கை அளவும் அதிகரித்துள்ளது.
தில்லியில் கரோனா தொற்று உறுதியாகும் நோ்மறை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்நோயால் ஏற்படும் மரணங்களின் விகிதம் 0.5 சதவீதமாகத்தான் உள்ளது. அந்த வகையில், தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
கரோனாவுக்காக தில்லி மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் 70 சதவீதம் காலியாகவே உள்ளன. மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றாா் அவா்.