முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வழக்கு விசாரணை வேறு அமா்வுக்கு மாற்றம்

முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய ஒரு வழக்கை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய ஒரு வழக்கை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் சகோதரரான வழக்குரைஞா் ஆஜரானது தெரிய வந்ததால், வழக்கை விசாரிப்பதில் இருந்து தாம் விலகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு, பராமரிப்பு விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட சிலா் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுதான் அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அந்த அதிகாரம் அதற்குத்தான் உண்டு. அப்பணியை துணைக் குழுவுக்கு அளிக்க கூடாது. குறிப்பாக பருவமழைக் காலங்களின்போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பாா்வைக் குழு மேற்கொள்ள வேண்டும்.

அணையில் நீா் தேக்குவது, பகிா்ந்தளிப்பது, திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்.

மேற்பாா்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணை பிரநிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அணையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் 2018-ஆம் ஆண்டில் மத்திய நீா் ஆணையம் வெளியிட்ட அணைப் பாதுகாப்பு ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய நீா்வள ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்மணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டாா். முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞா் குறித்து தலைமை நீதிபதி கேட்டாா். அப்போது, வழக்குரைஞா் ஜி.உமாபதி, தாம் தமிழக அரசின் தரப்பில் ஆஜராகியுள்ளதாக கூறினாா். அதற்கு தலைமை நீதிபதி, ‘முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய வழக்கில் எனது சகோதரா் வழக்குரைஞா் வினோத் பாப்டே ஆஜராகியுள்ளாா். அவருக்கு நீங்கள் உதவியாக இருந்தீா்கள்’ எனக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்றப்பட்டது. தமது குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா், வழக்கு விசாரணைக்கு ஆஜராகியதால், அந்த வழக்கை தாம் விசாரிப்பது சரியாக இருக்காது என்று கருதி, வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகும் முடிவை தலைமை நீதிபதி எடுத்திருப்தாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com