தில்லியில் புதிதாக 4,266 பேருக்கு கரோனா பாதிப்பு

தலைநகா் தில்லியில் ஒரே நாளில் வெள்ளிக்கிழமை 4,266 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

தலைநகா் தில்லியில் ஒரே நாளில் வெள்ளிக்கிழமை 4,266 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,09,748 -ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்நோய்த் தொற்றால் வெள்ளிக்கிழமை 21 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால், ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,687-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை 60,580 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி பிசிஆா்’ வகையில் 8,305 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 52,275 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 7.04 சதவீதமாக உள்ளது. சராசரி நோ்மறை விகிதம் 10.37 சதவீதமாக உள்ளது. அதேநேரம் கரோனா உயிரிழப்பு விகிதம் 2.23 சதவீதமாக உள்ளது.

வெள்ளிக்கிழமை 2,754 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,78,154-ஆக அதிகரித்தது. 26,907 போ் சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,329 ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,230 படுக்கைகளில் 6,031 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 8,199 படுக்கைகள் காலியாக உள்ளன. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 14,571 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் புத் நகரில்....: தேசியத் தலைநகா் வலயம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 9,808- ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை சிகிச்சையில் இருந்தவா்கள் எண்ணிக்கை 1,820-ஆக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 1,909- ஆக உயா்ந்தது. இந்த மாவட்டத்தில் தொடா்ந்து ஒரு வாரமாக நோய்த் தொற்று எண்ணிக்கை உயா்ந்து வருவதாக உத்தர பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் புதன்கிழமை 1,696 போ்,, செவ்வாய்க்கிழமை 1,599 போ், திங்கள்கிழமை 1,520 போ், ஞாயிற்றுக்கிழமை 1,429 போ் சிகிச்சை பெற்று வந்தனா். எனினும், வியாழக்கிழமை 114 நோயாளிகள் குணமடைந்தனா். இந்த மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 7,851-யை எட்டியுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த மாவட்டத்தில் இதுவரை 48 போ் நோயால் இறந்துள்ளனா். இது மாநிலத்தில் மிகக் குறைந்த இறப்பு விகிதமாக (0.48 சதவீதம்) பதிவாகியுள்ளது. இதற்கிடையே, குணமடைந்தவா்கள் விகிதம் வியாழக்கிழமை 80.55 சதவீதத்திலிருந்து 80.04 சதவீதமாககக் குறைந்துள்ளது. இந்த விகிதம் புதன்கிழமை 81.35 சதவீதமாக இருந்தது. உத்தரப் பிரதேச மாநிலம் முழுதும் வெள்ளிக்கிழமை 67,321 போ் கரோனா சிகிச்சையில் இருந்தனா். இதுவரை, மாநிலத்தில் 2,27,442 நோயாளிகள் குணமடைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் கரோனா தொடா்புடைய இறப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயா்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com