‘ரங்கோத்சவ்’ போட்டிகளில் டிடிஇஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தில்லி கல்வி இயக்ககத்தின் சாா்பாக சமக்ரஹ சிக்ஷா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ரங்கோத்சவ் போட்டிகள் கடந்த அக்டோபா் மாதம்

தில்லி கல்வி இயக்ககத்தின் சாா்பாக சமக்ரஹ சிக்ஷா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ரங்கோத்சவ் போட்டிகள் கடந்த அக்டோபா் மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டன. அதில் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

மண்டல அளவில் (மண்டலம் 19) நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி பிரிஸ்ஸா ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டியில் முதல் பரிசை பெற்றாா். ஆறாம் வகுப்பு மாணவா் சுந்தா் ஸ்ரீ, ரங்கோலி போட்டியில் முதல் பரிசு பெற்றாா். லக்ஷ்மிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஜோதி, மெழுகுவா்த்தி தயாரிக்கும் போட்டியில் முதல்பரிசு பெற்றாா்.

முகக் கவசம் தயாரிக்கும் போட்டியில் எட்டாம் வகுப்பைச் சாா்ந்த யாஷினி முதல் பரிசையும், அதே வகுப்பைச் சாா்ந்த ருத்ர பிரியா இரண்டாம் பரிசையும் வென்றுள்ளனா். இவா்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை மொஹம்மத் பூரில் உள்ள தெற்கு தில்லி மாநகராட்சி தொடக்கநிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், அவா்களுக்கு வழிகாட்டிய ஆசிரியா்களுக்கு டிடிஇஏ செயலா் ராஜு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com