தில்லியில் தென்மேற்குப் பருவமழை கடந்த இரு தினங்களாக இல்லாத நிலையில், வெள்ளிக்கிழமை மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலையில் சிறிது மாற்றம் காணப்பட்டது.
தில்லியில் கடந்த இரு தினங்களாக மழையில்லை. வெள்ளிக்கிழமை மிதமான வெயில் காணப்பட்டது. இதனால், லேசான புழுக்கமும் நிலவியது.
தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி குறைந்து 25.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம் ஏதுமின்றி 34.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஆயா நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸாகவும், லோதி ரோடில் 34.4 டிகிரி செல்சியஸாகவும், நரேலாவில் 34.3 டிகிரி செல்சியஸாகவும், பாலத்தில் 33.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 64 சதவீதமாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மழை ஏதும் பதிவாகவில்லை.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 60 புள்ளிகளாக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை (ஜூலை 24) வானம் பகுதி மேகமூட்டத்துடன் இருக்கும். இடி-மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.