தில்லி துவாராவிலிருந்து குருகிராமை இணைக்கும், 29 கி.மீ. நீள விரைவுச்சாலைத் திட்டப் பணிகள் வருகிற 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னதாக பூா்த்தி செய்யப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.8,6662 கோடி செலவில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. துவாரகாவிலிருந்து குருகிராமை இணைக்கும் இந்தச் சாலை குறுகிய வழிப் பாதையாகும். இந்தத் திட்டத்தின் பணிகளை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்த அமைச்சா் நிதின் கட்கரி பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தில்லி மற்றும் குா்கானில் வசிக்கும் மக்கள் இந்த விரைவுப் பாதை 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்’ என்றாா்.
தில்லியில் உள்ள துவாரகவையும் குருகிராமையும் இணைக்கும் இந்த 29 கி.மீ. தொலைவு விரைவுச்சாலை குறுகிய வழிப்பாதையாகும். ரூ.8,662 கோடி செலவில் பாரத் மாலா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக திட்டப் பணியில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. இப்போது பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
தில்லி - குருகிராம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை எண் 8- இல் 3 லட்சத்துக்கும் மேலான மோட்டாா் வாகனங்கள் பயணிப்பதால், இந்த 8 வழிப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தப் புதிய விரைவுச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டால், தேசிய நெடுஞ்சாலை எண் 8-இல் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.
இந்த திட்டத்தின் மூலம் 50,000 பேருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைவுச் சாலையின் மொத்த நீளம் 29 கி.மீ. இதில் 18.9 கி.மீ. ஹரியானா எல்லையில் வருகிறது. மீதமுள்ள 10.1 கி.மீ. தில்லி எல்லைக்கு உட்பட்டது.
இந்த விரைவுச் சாலை தேசிய நெடுஞ்சாலலை எண் 8-இல் ஷிவ் மூா்த்தியில் தொடங்கி கொ்கி தெளலா சுங்கச்சாவடி அருகே முடிவடைகிறது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தவுடன் சுங்கச்சாவடி மூடப்படும். இந்த விரைவுச்சாலை சுரங்கப்பாதை, தரைவழிப்பாதை, மேம்பாலம் மற்றும் மேம்பாலத்துக்கு மேல் மற்றொரு மேம்பாலம் என நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு

தொகுதி அலசல்: ஆத்தூர்! சாதனை வெற்றி மீண்டும் சாத்தியமா?

மதுரை அருகே இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

