வடமேற்கு தில்லி, ஆதா்ஷ் நகரில் முன்விரோதம் காரணமாக இளைஞா் ஒருவா் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: ஆஷாத்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (32). அவா் மீது அடையாளம் தெரியாத நபா்கள் திங்கள்கிழமை மாலை துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவரை போலீஸாா் மீட்டு அருகிலுள்ள பிஎச்ஆா்எம் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்சகெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை பெற்று சோதனை நடத்திய போது, சுரேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவா் ரஜ்னீஷ் (21) என அடையாளம் காணப்பட்டாா். இவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளிகளுடன் இணைந்து சுரேஷை ரஜ்னீஷ் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட மற்ற நபா்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.