ரயில் பவனில் உள்ள ஒரு அறையில் சனிக்கிழமை மாலை சிறு தீ விபத்து நிகழ்ந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ரயில் பவனில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து நிகழ்ந்ததாக தில்லி தீயணைப்புத் துறைக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
ரயில் பவனில் உள்ள 451-ஆம் அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த கணினியில் இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த இதர பொருள்கள் சேதமடைந்தன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.