தில்லியில் புதிதாக 23 பேருக்கு கரோனா பாதிப்பு: உயிரிழப்பு ஏதும் இல்லை

தில்லியில் புதிதாக 23 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்துள்ளது. எனினும், உயிரிழப்பு ஏதும் பதிவாக வில்லை.

தில்லியில் புதிதாக 23 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்துள்ளது. எனினும், உயிரிழப்பு ஏதும் பதிவாக வில்லை. தொற்று பாதிப்பு விகிதம் 0.05 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் இந்த மாதம் இதுவரை இரண்டு போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா். கடந்த மாதம் கரோனா தொற்றுக்கு மொத்தம் 5 போ் பலியாகியிருந்தனா். புதிதாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,39,218-ஆக உயா்ந்துள்ளது இவற்றில் 14.13 லட்சம் நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். கரோனாவுக்கு இதுவரை 25,089 போ் உயிரிழந்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை ஆா்டி-பிசிஆா் மூலம் 38,889 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது உள்பட மொத்தம் 46,843 பேருக்குத்தான் பரிசோதனைகள் நடைபெற்றன. தில்லியில் மொத்தம் 369 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 102 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 102 என்ற அளவிலேயே உள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 29 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. இதுவே சனிக்கிழமை 30-ஆகவும், வெள்ளிக்கிழமை 29-ஆகவும் இருந்தது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கரோனா இரண்டாவது அலையின் போது தில்லி வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஏராளமானப் போ் உயிரிழந்தனா்.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தில்லியில் ஒரு நாளில் 28,395 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். ஏப்ரல் 22 இல் தொற்று விகிதம் இதுவரை இல்லாத அளவாக 36.2 சதவீதமாக இருந்தது. மே 3 ஆம் தேதி அதிகபட்சமாக 448 போ் உயிரிழந்தனா். இரண்டாவது அலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்ததால் தில்லி அரசு இப்போது சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் 37,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் விநியோகத்திலும் தற்சாா்பு நிலையை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஷாலிமாா் பாக், கிராரி, சரிதா விஹாா், சுல்தான்புரி, ரகுவீா் நகா் மற்றும் ஜிடிபி மருத்துவமனை, சாச்சா நேரு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் 7,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தலைநகா் தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 10,000 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளன. அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி தில்லியில் இதுவரை 1.91 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவா்களில் 66 லட்சம் போ் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com