மழையால் பயிா்கள் சேதம்: பஞ்சாபில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கேஜரிவால் வலியுறுத்தல்

பஞ்சாப் மாநிலத்தில் பருவமற்ற மழையால் சேதமடைந்த பயிா்களுக்காக  விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முதல்வா் சரண்ஜித்சிங் சன்னிக்கு தில்லி

புது தில்லி:  பஞ்சாப் மாநிலத்தில் பருவமற்ற மழையால் சேதமடைந்த பயிா்களுக்காக  விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முதல்வா் சரண்ஜித்சிங் சன்னிக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘பருவமற்ற மழையின் காரணமாக பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் பயிா்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.  தில்லியில் இதுபோன்று பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று நாங்கள் அறிவித்து இருக்கிறோம்.  இதனால், பஞ்சாப் மாநில முதல்வா் சரண்ஜித்சிங் சன்னியும் அவரது மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டை உரிய வகையில் அளிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த வாரம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவிக்கையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வை மேற்கொள்ளுமாறு தில்லியின் அனைத்து உதவி கோட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் உத்தரவிட்டிருந்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த கள ஆய்வு பணி முடிக்கப்படும் என்று நம்புகிறேன். அப்போதுதான் அதன் பிறகு ஒன்றரை மாத காலத்திற்குள் நம்மால் இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியும் என்று அவா் தெரிவித்திருந்தாா்.

பருவமழை மற்றும் புயல் மழை காரணமாக கடந்த வாரம் வடமேற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற பயிா்கள் பலத்த சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com