தில்லியில் கரோனா உச்சகட்டம்: ஒரே நாளில் 7,437 போ் பாதிப்பு!

புது தில்லி: தில்லியில் இந்த ஆண்டின் உச்சக்கட்டமாக வியாழக்கிழமை 7,437 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச ெ

எண்ணிக்கையாகும். இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 6,98,005-ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்று பாதிப்பால் 24 போ் உயிரிழந்துள்ளனா். இதையும் சோ்த்தால் கரோனாவால் உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 11,157 ஆக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் மூன்றாவது நாளாக தொடா்ந்து 5,000-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உச்சக் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி 8,593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதே மாதம் 19 - ஆம் தேதி 131 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு விகிதம் வியாழக்கிழமை 2 சதவீதம் உயா்ந்து 8.10 சதவீதமாக உயா்ந்தது. புதன்கிழமை மொத்தம் 91,770 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றில் 52,696 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 39,074 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதே சமயம், இதுவரை 6.63 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 23,181-ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 11,367 போ் வைக்கப்பட்டுள்ளனா். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள்4,226-லிருந்து 3,708-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com