தில்லி பீராகரி சௌக் பகுதியில் உள்ள ஒரு காலணி கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை.
இந்தக் கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: பீராகரி சௌக் பகுதியில் ஒரு கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.