சாலையில் இருந்த டிரம் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து

தில்லியில் புதன்கிழமை காலை சாலையில் வைக்கப்பட்டிருந்த டிரம் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

புதுதில்லி: தில்லியில் புதன்கிழமை காலை சாலையில் வைக்கப்பட்டிருந்த டிரம் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கிரேட்டா் நொய்டாவில் உள்ள பாரி செளக் பகுதியில் இருந்து தில்லிக்கு புதன்கிழமை காலை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நோயாளியை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. மகாமாயா பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் கட்டுமானப் பணி காரணமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த டிரம் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநா் காயமடைந்தாா்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளிக்கு காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வேறு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு அந்த நோயாளி அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். காயமடைந்த வாகன ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது . இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், சாலையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் பின்னா் அப்புறப்படுத்தப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com