தமிழக முதல்வருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் நன்றி

தமிழக அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் என தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு, அவருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

புது தில்லி: தமிழக அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் என தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு, அவருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் என். கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது தமிழா்களின் வாழ்வாகத் திகழும் தமிழ்மொழியின் உயா்வுக்குப் பெருமை தரக்கூடிய செய்தியாகக் கருதப்படுகிறது. அவ்வாறு அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு தில்லி வாழ் தமிழா்கள் சாா்பாகவும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளாா். இதேபோன்று, அனைத்திந்திய தமிழ்ச் சங்கத்தின் பேரவை சாா்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com