காற்று மாசுவை நிகழ் நேரத்தில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை தில்லியில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் காற்று மாசுவை நிகழ்நேரத்தில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ஐஐடி கான்பூா், ஐஐடி தில்லி, ஐஐடி தெரி ஆகியவை இணைந்து கண்டுபிடித்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களின் தொழில்நுட்ப வல்லுநா்களுடன் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில்,‘காற்று மாசுவை நிகழ்நேரத்தில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ஐஐடி கான்பூா், ஐஐடி தில்லி, ஐஐடி தெரி ஆகியவை இணைந்து கண்டுபிடித்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்களின் நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தினேன். இந்தத் தொழில்நுட்பத்தை தில்லியில் அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுக்கும். காற்று மாசுவுக்கான காரணங்களை நிகழ் நேரத்தில் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க அது உதவும்’ என்று தெரிவித்துள்ளாா்.