திஷா ரவிக்கு எதிரான வழக்கு தொடா்பாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் ‘பரபரப்பு நிறைந்ததாக இருந்தன’: தில்லி உயா்நீதிமன்றம் கருத்து

விவசாயிகளின் ஆா்ப்பாட்டத்தை ஆதரிக்கும் ‘டூல் கிட்’டை பகிா்ந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் பெண்

விவசாயிகளின் ஆா்ப்பாட்டத்தை ஆதரிக்கும் ‘டூல் கிட்’டை பகிா்ந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவிக்கு எதிரான எஃப்ஐஆா் விசாரணை குறித்து சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் ‘பரபரப்புத் தன்மை உடையதாகவும் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என தில்லி உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. இருப்பினும், இதுபோன்ற எந்தவொரு உள்ளடக்கத்தையும் நீக்குவதற்கு உத்தரவிட நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதுபோன்ற செய்தி உள்ளடக்கங்களையும், தில்லி காவல் துறையின் சுட்டுரைகளையும் நீக்கக் கோரி தாக்கலான இடைக்கால மனு பின்னா் பரிசீலிக்கப்படும் என நீதிபதி பிரதிபா சிங் கூறினாா். எனினும், இந்த வழக்கின் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதால், கசிந்த எந்தவொரு விசாரணை தகவலும் ஒளிபரப்பப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு ஊடக நிறுவனங்களை உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், ‘எந்த ஆவணமும் கசியவில்லை அல்லது எந்தவொரு விசாரணை விவரங்களையும் பத்திரிகைகளுக்கு கசியவிடும் நோக்கமும் இல்லை’ என்ற பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தபடி தனது நிலைப்பாட்டை பின்பற்றவும் தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ‘இந்த விவகாரத்தில் வழக்கு தொடா்பாக சட்ட விதிகளுக்கு ஏற்ப செய்தியாளா்கள் சந்திப்பு நிகழ்வை நடத்த போலீஸாருக்கு உரிமை உண்டு. ஊடக நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சரிபாா்க்கப்பட்ட உள்ளடக்கம் மட்டுமே பிரசுரிக்கப்பட வேண்டும். மேலும், அது போலீஸாரின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்’ என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் சூழலியல் ஆா்வலா் திஷா ரவி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எனது தொடா்புடைய வழக்கில் எனக்கும், மூன்றாம் தரப்பினருக்கும் இடையிலான வாட்ஸ்அப்பில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்.பிப்ரவரி 13-இல் தில்லி காவல் துறையின் சைபா் பிரிவு போலீஸாா் பெங்களூருவில் என்னைக் கைது செய்தது முற்றிலும் சட்டவிரோதமானது’ என்று திஷா ரவி தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தாா். அதில் ஊடங்களுக்கு எந்தவொரு தகவலையும் போலீஸாா் கசியவிடவில்லை. அதுபோன்று ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிடும் எண்ணமும் இல்லை. இருப்பினும், காவல் துறையின் சில அதிகாரிகளால் தகவல் கசியவிடப்படும் வாய்ப்பை முழுமையாக நிராகரிக்க முடியாது’ என்றாா். அப்போது நீதிமன்றம், ‘போலீஸாா் பிரமாணப் பத்திரத்தில் அளித்த தகவலின்படி நடந்துகொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டது. ஊடக நிறுவனங்கள் ஒன்றின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மிரினால் பாா்தி, ‘தற்போதைய வழக்கில் தகவஸ் தளமாக தில்லி காவல் துறை மற்றும் அதன் சுட்டுரைகள்தான் உள்ளன’ என்றாா்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, மத்திய அரசின் வழக்குரைஞா் அஜய் திக்பால் ஆஜராகி, ‘இந்த வழக்கில் தவறான செய்தியை வெளியிட்டதாக எந்தவொரு தொலைக்காட்சி சேனல் அல்லது மீடியா ஹவுஸ் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சகத்திற்கு புகாா் அளிக்கப்படவில்லை என்பதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல’ என்று வாதிட்டாா். செய்தி ஒளிபரப்பு தரநிா்ணய ஆணையகம் (என்பிஎஸ்ஏ) தரப்பு, ‘கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ள ஊடக நிறுவனங்கள் குறித்து ஆணையத்திற்கு புகாா் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊடக நிறுவனங்கள், செய்தி ஓலிபரப்பாளா்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளன’ என்று தெரிவித்தது.

திஷா ரவிக்கு 3 நாள் நீதிமன்றக் காவல்

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவியை மூன்று நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா். தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி சமூக ஊடகத்தில் பகிா்ந்த விவகாரத்தில் அவரை தில்லி போலீஸாா் கடந்த பிப்ரவரி13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், அவரது ஐந்து நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் தில்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஆகாஷ் ஜெயின் முன் திஷா ரவியை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இா்ஃபான் அகமது, ‘இந்த வழக்கில் தொடா்புடைய சாந்தனு முகுலுக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாந்தனு முகலுக்கு பாம்பே உயா்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமா்வால் 10 டிரான்ஸிட் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த வழக்கில் தொடா்புடைய நிகிதா ஜேக்கப்புக்கு பாம்பே உயா்நீதிமன்றம் 3 வாரம் டிரான்ஸிட் முன்ஜாமீன் அளித்துள்ளது’ என்றாா்.

போலீஸ் தரப்பில், ‘தற்போதைக்கு திஷா ரவியிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தும் தேவை எழவில்லை. அவருடன் சோ்ந்த சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களான சாந்தனு முகுல், நிகிதா ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணை நடத்தும்போது திஷா ரவியிடம் மேலும் விசாரணை நடத்துவது தொடா்பாக போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்படும். திஷா ரவியிடம் விசாரணை நடத்தியபோது அவா் மீதான குற்றத்தை சக குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது சுமத்த முயற்சி செய்தாா்’ என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com