நேரு பிளேஸில் மதுபானக் கூடத்துக்கு சீல்

கரோனா விதிமுறைகளை மீறியதாக நேரு பிளேஸில் மதுபானக் கூடம் ஒன்றுக்கு தில்லி காவல் துறை சீல் வைத்துள்ளது. இதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கரோனா விதிமுறைகளை மீறியதாக நேரு பிளேஸில் மதுபானக் கூடம் ஒன்றுக்கு தில்லி காவல் துறை சீல் வைத்துள்ளது. இதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயா் அதிகாரி கூறியது: தில்லி நேரு பிளேஸில் உள்ள மதுபானக் கூடத்துக்கு புத்தாண்டு தினத்தில் கரோனா விதிமுறைகளை மீறி அதிகளவு விருந்தினா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இங்கு சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது தொடா்பாக புகாா் கிடைக்கப் பெற்றது. இதன் அடிப்படையில், போலீஸாா் அதிரடி சோதனை நடத்தி இந்த மதுபானக் கூடத்தை சீல் வைத்துள்ளனா். அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com