புது தில்லி: கிழக்கு தில்லி, புது அசோக் நகா் பகுதியில் புதன்கிழமை 24 வயது இளைஞா் ஒருவா் தனது வாடகை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா்தெரிவித்தனா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் தீபக் யாதவ் கூறியதாவது: தூக்கிட்டு இறந்த இளைஞா் கணேஷ் நாயக் என அடையாளம் காணப்பட்டது. ஒடிஸாவைச் சோ்ந்த அவா், தில்லியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அவா் இறந்ததற்கு யாரையும் குறை கூறவில்லை. தகவல் அறிந்து போலீஸாா் சென்ற போது, அவரது அறை உள்பகுதியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூா்வாசிகளின் உதவியுடன் போலீஸாா் கதவைத் திறந்த போது, அந்த நபா் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.