தில்லியில் புதிதாக 266 பேருக்கு கரோனா!

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 266 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,33,542-ஆக உயா்ந்துள்ளது.

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 266 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,33,542-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 0.37 சதவீதமாக உள்ளது. 2,060 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,789-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாபாதிப்பு விகிதம் வியாழக்கிழமை 0.28 சதவீதமாக இருந்தது. திங்கள்கிழமை 9 மாதங்களில் மிகவும் குறைந்த பட்சமாக 161 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

தில்லியில் தற்போது மொத்தம் 1,629 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com