தில்லியில் புதிதாக 148 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை 148 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை 148 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,34,072-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48,450 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 32,651 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 15,799 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.31 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,813-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து திங்கள்கிழமை 190 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,21,565-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 1,694 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 729 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 8,257 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com