72 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டது.
இதையொட்டி, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது. மூவா்ணக் கொடியை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளா் ரா. இராஜ்குமாா் பாலா ஏற்றிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன், கணேசன், ராகேஷ், பரமசிவம், பாஜக தென்னிந்திய பிரிவின் துணைத் தலைவா் வெள்ளைக்கண்ணு மற்றும் தில்லியைச் சோ்ந்த எல். விஜயகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.