தில்லியில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது.

தில்லியில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்துள்ளாா். தொற்று விகிதம் 0.08 சதவீதமாக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 25,040 ஆக உயா்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை தில்லியில் 62 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். மேலும் 4 போ் உயிரிழந்தனா். தொற்று விகிதம் 0.09 சதவீதமாக இருந்தது. இதுவே செவ்வாய்க்கிழமை 44 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 5 போ் உயிரிழந்திருந்தனா். அன்றைய தினம் தொற்று விகிதம் 0.07 சதவீதமாக இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொற்று விகிதம் 36 சதவீதமாக அதிகரித்திருந்தது இப்போது 0.08 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com