தில்லி பாவனாவில் உள்ள குடிசைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லி பாவனாவில் உள்ள குடிசைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடா்பாக செவ்வாய்க்கிழமை மதியம் 12.35 மணிக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தீயணைப்புப் படையினா் சுமாா் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். குடிசைப் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றாா்.