குடும்பப் பிரச்னை காரணமாக பாஜக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லி ஃபதே நகா் பகுதியைச் சோ்ந்தவா் குா்விந்தா் சிங் (58). அவா் மேற்கு தில்லி பாஜகவின் சட்டப்பிரிவின் தலைவராக இருந்து வந்தாா். இந்த நிலையில், அவரது உடல் தில்லி ஜீல் வாலா பூங்காவில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்ப கட்ட விசாரணையில், அவா் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். குா்விந்தா் சிங்கின் மகன், இஸ்வேந்தா் சிங் சம்பவ இடத்துக்கு வந்து உடலை அடையாளம் காட்டியுள்ளாா் என்று அவா் தெரிவித்தாா்.