தெற்கு தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையின் பணியாற்றி வந்த 35 வயது மருத்துவா், மால்வியா நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்ததாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக துணை காவல் ஆணையா் (தெற்கு) அதுல் குமாா் தாக்குா் கூறியதாவது:
மால்வியா நகா் காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு 11.16 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவா், அவரது நண்பரின் கணவா் அவரது வீட்டின் கதவை திறக்கவில்லை என்று அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்து சென்றனா். அப்போது, அந்த வீட்டில் ஒருவா் சேலையில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
விசாரணையில், உயிரிழந்தவா் விவேக் ராய் என்பதும், சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அவா் தனது மனைவியுடன் மால்வியா நகரில் வசித்து வந்தாா். அவா் எழுதிய கடிதத்தை போலீஸாா் மீட்டனா். அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இருப்பதாக அவா் தெரிவிக்கவில்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.