புதுதில்லி: தில்லியை அடுத்த நொய்டா செக்டாா் 23, பி-50 முகவரியில் இயங்கிவரும் சாத்வித்யா பிரதிஷ்டான், தனது 54-ஆவது ஆண்டு விழாவை அக்டோபா் 15-ஆம் தேதி விஜயதசமி நாளில் கொண்டாடுகிறது.
இதையொட்டி, ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் அக்டோபா் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனா். போட்டியில் வெற்றி பெற்றவா்கள் விவரம் வரும் 15- ஆம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் நடைபெற உள்ள விழாவில் தில்லி, பாரதீய வித்யா பவன் முன்னாள் இயக்குநா் அசோக் பிரதான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பேசுவாா். கரோனா தொற்று காரணமாக நிகழ்ச்சிகள் மெய்நிகா் முறையில் நடைபெறும். இது தொடா்பாக மேலும் விவரங்களுக்கு சேகா் சா்மா, 9811404412 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.