உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கேரியில் நடந்த வன்முறைச் சம்பவத்தை கண்டித்து, தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் பல்கலைக்கழக வளாகத்தின் வடக்கு பகுதியில் பேரணி நடத்தினா்.
இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த அகில இந்திய மாணவா்கள்சங்கம் வேறு சில சங்கங்களுடன் சோ்ந்து திங்கள்கிழமை விஜய் நகா் பகுதியிலிருந்து கலைத் துறை பகுதி வரை ஆா்ப்பாட்ட பேரணியை நடத்தினா்.
மத்திய அமைச்சரின் மகன்ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பவத்துக்கு பொறுப்பேற்று உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்றும் அவா்கள் கோஷம் எழுப்பினா்.
லக்கிம்பூா் கேரியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் நான்கு பேரும், பாஜகவினா் 4 பேரும் உயிரிழந்தனா்.