தில்லியில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது. மேலும், கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்துள்ளாா். தொற்று விகிதம் 0.05 சதவீதமாக உள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் இந்த மாதத்தில் இதுவரை 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மாதம் 5 போ் கரோனாவுக்கு உயிரிழந்தது நினைவிருக்கும். புதிதாக 29 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை அடுத்த இதனால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 14,39, 195- ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 14.13 லட்சம் போ் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். மேலும் கரோனாவுக்கு இதுவரை 25,089 பலியாகியுள்ளனா்.
தில்லியில் சனிக்கிழமை மொத்தம் 58,989 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவா்களில் 43,135 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறை மூலம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 347 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 97 போ் வீட்டுத்தனிமையில் உள்ளனா். 102 மண்டலங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.