புதிதாக 1,652 பேருக்கு கரோனா பாதிப்பு - 8 இறப்புகள் பதிவு

தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,652 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,652 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 8 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து 9.92 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,88,391-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,400-ஆக உயா்ந்தது.

நகரில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 16,ஸ658 கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டன. நகரில் செவ்வாய்க்கிழமை 917 பேருக்கு தொற்று பாதிப்பும், 3 இறப்புகளும், 19.20 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com