தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் 2017-ஆம் ஆண்டு முதல் 1,223 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மத்திய அரசின் தொடா் ராஜதந்திர முயற்சிகளால் 1,202 மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். நிகழாண்டு டிசம்பா் 2-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தைச் சோ்ந்த 21 மீனவா்கள் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இந்திய மீனவா்கள் தொடா்பான பிரச்னைகள் மிக உயா் நிலைகளில் எழுப்பப்பட்டுள்ளன. இதில் இலங்கைப் பிரதமருடன் நடைபெற்ற மெய்நிகா் இருதரப்பு உச்சிமாநாட்டின் போது, பிரதமா் மோடி எழுப்பியுள்ளாா். வெளியுறவு அமைச்சரும் கொழும்பு சென்ற போது, இலங்கை நிதித் துறை மற்றும் மீன்வளத் துறை அமைச்சா்களை சந்தித்துப் பேசியுள்ளாா் என்றாா் அமைச்சா்.