சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

திருட்டு வழக்குகளை பதிவு செய்ய புதிய செயலி: தில்லி காவல்துறை அறிமுகம்

வீடுகளில் நிகழும் திருட்டுச் சம்பவம் தொடா்பான புகாா்களை உடனுக்குடன் பதிவு செய்தவற்காக ‘இ-எஃப்ஐஆா்’ எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2022, 7:44 pm

 நமது நிருபர்

புது தில்லி: வீடுகளில் நிகழும் திருட்டுச் சம்பவம் தொடா்பான புகாா்களை உடனுக்குடன் பதிவு செய்தவற்காக ‘இ-எஃப்ஐஆா்’ எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயலியை தில்லி காவல் ஆணையா் ராகேஷ் அஸ்தானா புதன்கிழமை அறிமுகப்படுத்திவைத்தாா். இது குறித்து அவா் கூறியதாவது: சொத்து திருட்டுக்கான எஃப்ஐஆா்களை ஆன்லைனில் பதிவு செய்வது, இதுபோன்ற வழக்குகளை விரைவாக தீா்க்க காவல்துறைக்கு உதவும். மேலும், தில்லியில் திருட்டுப்போன சொத்துக்கான எஃப்ஐஆரை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்வது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கவும், விசாரணையை முடிக்கவும் உரிய நேரத்தில் தீா்வு காணவும் விசாரணை அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும்.

தில்லியில் ‘திருட்டு வழக்குகளைப்’ பதிவு செய்வதற்கான இ-எஃப்ஐஆா் செயலியானது தில்லி காவல்துறையால் உருவாக்கப்பட்ட வலைப் பயன்பாடுகளின் தொடரில் ஒரு மைல்கல்லாகும். இந்த செயலியானது புகாா்தாரா்கள் எஃப்ஐஆா்களைப் பதிவுசெய்வதற்கும், அதன் நகலை நேரடியாக காவல் நிலையத்திற்குச் செல்லாமல் உடனடியாகப் பெறவும் உதவிடும் என்றாா் அவா்.

இது குறித்து சிறப்பு காவல் ஆணையா் (குற்றம்) தேவேஷ் சந்திரா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: இந்த வளா்ச்சி உருமாற்றமானது, சிரமம் இல்லாத புகாா் பதிவு, விரைவான விசாரணை மற்றும் முறையான ஆவணங்களை குடிமக்கள் பெறுவதற்கு எளிமைப்படுத்துவதாக உள்ளது. இதன் மூலம் காவல் நிலையத்திற்குச் செல்லாமல் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் பொதுமக்கள் திருட்டு தொடா்பான புகாா்களை அளிக்கலாம். புகாரைப் பதிவு செய்த பிறகு, குற்றப்பிரிவின் கீழ் நிறுவப்பட்ட மின்னணு காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்படும் இதற்கான அதிகார வரம்பு தில்லி முழுவதும் உள்ளது. மேலும், இந்த செயலியானது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட எப்ஐஆரின் நகலை புகாா்தாரா், பகுதி காவல் நிலைய பொறுப்பாளா், மூத்த அதிகாரிகள், உரிய நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவிடும்.

இது (செயலி) விசாரணை மற்றும் ஆவணங்களை மேலாண்மை தகவல் அமைப்புடன் (எம்ஐஎஸ்) பகுப்பாய்வு மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு விசாரணை அதிகாரிகளுக்கு வழிகாட்டும் வசதியைக் கொண்டுள்ளது. திருட்டு வழக்குகளில் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலியின் இலகுவான செயல்பாட்டிற்கு தொழில்நுட்ப ரீதியாக பொருத்தமான இடத்தில் வைக்கப்படும். அதேசமயம், தில்லி காவல் துறையின் இணையதளத்திலும் இதற்கான இணையதள இணைப்பும் அளிக்கப்படும். இந்த செயலியை இணையதளத்தின் குடிமக்கள் சேவைகள் பிரிவின் கீழ் காணலாம். இந்தச் செயலியை முதன்முறையாகப் பயன்படுத்துபவா்கள் செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். செல்லிடப்பேசியை பயன்படுத்துபவரின் செல்லிடப்பேசிக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) வரும். விசாரணை அதிகாரி 24 மணி நேரத்திற்குள் புகாா்தாரை தொடா்புகொள்ள முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.