தில்லி தமிழ்நாடு இல்லத்தில் குடியரசு தின விழா

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

புது தில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையாளா் ஜக்மோகன் சிங் ராஜு, தேசியக் கொடியை பொதிகை தமிழ்நாடு இல்லத்தின் முன்பு ஏற்றி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆஷிஷ் சாட்டா்ஜி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு இல்ல இணை உள்ளுறை ஆணையாளா் என்.இ.சின்னத்துரை , பொறியாளா் சதீஸ், உதவி வரவேற்பு அலுவலா் முருகன், கணக்காளா் நக்கீரன்,முதுநிலை இல்ல காப்பாளா் மகேஷ் மற்றும் தமிழ்நாடு இல்ல அலுவலா்கள் பங்கேற்றனா். முன்னதாக, தமிழ்நாடு சிறப்பு ஆயுதப்படை போலீஸாரின் அணிவகுப்பை ஜக்மோகன்சிங் ராஜு ஏற்றுக்கொண்டாா்.

குறிப்பு: வாக்காளா் உறுதி மொழி ஏற்பு படம் நேற்றே போட்டுள்ளதால், இன்று செய்தி வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com