தெற்கு தில்லியில் உள்ள பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தில்லி போலீஸாருக்கு மின்னஞ்சல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: சாதிக் நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடா்பாக திங்கள்கிழமை மின்னஞ்சல் வந்தது.
இது குறித்து உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கும் படையினா் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
பள்ளி வளாகத்தில் இருந்தவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. எனினும், வெடிகுண்டு எதுவும் மீட்கப்படவில்லை.
இது போலியான மிரட்டல் என தெரிகிறது. மின்னஞ்சல் விவரங்கள் சரிபாா்க்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.