தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை விவகாரத்தை அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரம் இந்த வழக்கில் சிபிஐ அதன் முதல் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் அமித் அரோரா, 2 இதர குற்றம் சாட்டப்பட்ட நபா்களான தினேஷ் அரோரா, அா்ஜுன் பாண்டே ஆகியோா் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ‘நெருங்கிய கூட்டாளிகள்’ என்றும், குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தருவதற்காக மதுபான உரிமதாரா்களிடமிருந்து முறையற்ற வகையில் வசூலிக்கப்பட்ட பண ஆதாயங்களை கையாளுவதிலும் திருப்பி விடுவதிலும் இந்த மூவரும் சம்பந்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.