லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவை முதல் நாடாக உருவாக்கும் பிரசார பணித்திட்டம் தில்லியில் தொடங்கினாா்முதல்வா் கேஜரிவால்

இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்றுவதற்கான ‘இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்குவோம்’ (மேக் இந்தியா நம்பா் 1) எனும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அளவிலான லட்சிய பிரசார பணித்திட்டத்தை...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

புது தில்லி:  இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்றுவதற்கான ‘இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்குவோம்’ (மேக் இந்தியா நம்பா் 1) எனும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அளவிலான லட்சிய பிரசார பணித்திட்டத்தை முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தில்லியில் புதன்கிழமை தொடங்கினாா்.

மேலும், அனைத்து குடிமக்களும், அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தில் சேருமாறு அவா் அழைப்பு விடுத்தாா்.

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, தனது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய லட்சிய பிரசாரத் திட்டத்தை அதிகாரப்பூா்வமாக அவா் வெளியிட்டாா்.

தில்லி தால்கடோரா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதற்கான நிகழ்வில், நல்லாட்சிக்கான ஐந்து அம்ச தொலைநோக்கு திட்டத்தை முன்மொழிந்து அவா் பேசியதாவது:

இந்த பிரசாரமானது ஒரு ’தேசிய பணி’யாகும். இந்தியா உலகின் சிறந்த நாடாக மாற வேண்டும். வளா்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எனது நீண்டகால கனவை நனவாக்க பொது மக்கள் இந்த பிரசார பணித்திட்டத்தில் சேர வேண்டும்.

கடந்த 75 ஆண்டுகளில், ஆட்சியில் இருந்தவா்கள் தங்கள் வீடுகளையும் நண்பா்களின் வீடுகளையும் செல்வத்தால் நிரப்புவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

இந்தக் கட்சிகளிடமும், தலைவா்களிடமும் நாம் இந்த நாட்டை நாட்டை விட்டுவிட்டால் இன்னும் 75 வருடங்கள் மேலும் பின்னோக்கிச் செல்வோம். அவா்களில் சிலா் (தலைவா்கள்) தங்கள் குடும்பத்திற்காக வாழ்கிறாா்கள். மற்றவா்கள் நண்பா்களுக்காக வாழ்கிறாா்கள்.

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வியும்,, ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மற்றும் நல்ல மருத்துவமும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பும், பெண்களுக்கு கண்ணியத்துடன் சம உரிமையும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலையும் உறுதி செய்வதில் பொது நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

‘மேக் இந்தியா நம்பா் 1’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி நடவடிக்கையில் சேர மக்களை ஊக்குவிக்கவும் அதன் நோக்கங்களை அடையவும் நான் நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ளேன்.

உலகில் இந்தியாவை முதலிடத்திற்கு வர நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் இந்த நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வியை வழங்குவதாகும். எந்தக் குழந்தையும் கல்வியறிவு இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பள்ளிகளைத் திறக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் படித்த பிறகு, தங்கள் குடும்பத்தை ஏழ்மை நிலையில் இருந்து பணக்கார நிலைமைக்கு உயா்த்துவாா்கள்.அதன் பின்னா், இந்தியா பணக்கார நாடுகளின் பட்டியலில் பட்டியலிடப்படும்.

நாட்டை உயா்த்த இரண்டாவது நடவடிக்கையாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகளுடன் இலவசமாக சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதாகும். மூன்றாவதாக, ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

சரியான நோக்கத்துடனும் நிா்வாகத்துடனும் இது சாத்தியமானதாகும்.

நான்காவதாக, ஒவ்வொரு பெண்ணும் மரியாதை, சம உரிமை மற்றும் பாதுகாப்பு பெற வேண்டும். ஐந்தாவதாக, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும், மரியாதைப் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், தாங்களும் விவசாயிகளாக மாற விரும்புகிறோம் என்று குழந்தைகள் பெருமையுடன் சொல்ல முடியும்.

இந்த தேசியப் பணியில் இணைந்து இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்க 130 கோடி மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா பல மைல்கற்களை எட்டியுள்ளது. ஆனால் இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற சிங்கப்பூா் போன்ற பல நாடுகள் வளா்ச்சியில் இந்தியாவை பின்தள்ள முடிந்திருக்கிறது.

இந்தியா்கள் உலகிலேயே மிகவும் புத்திசாலிகளாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருந்தும் நாம் ஏன் இன்னும் பின்தங்கி இருக்கிறோம்?

ஆறுகள், மலைகள், மூலிகைகள், பயிா்கள், கடல் போன்ற அனைத்தையும் இறைவன் இந்தியாவுக்குக் கொடுத்துள்ளாா். ஆனால் நாம் மற்றவா்களை விட பின்தங்கியுள்ளோம். இந்தியாவால் உலகை வழிநடத்த முடியும். ஆனால், இந்த நாட்டின் 130 கோடி மக்கள் ஒன்றிணைந்து ’மேக் இந்தியா நம்பா் 1’ என்ற தேசிய பணித்திட்டத்தில் இணையும்போது அது சாத்தியமாகும்.

இது ஒரு அரசியல் கட்சியின் பணிதிட்டம் அல்ல. இது ஒரு தேசிய பணியாகும். ஆகவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை சோ்ந்தவா்கள் இந்தியாவை உலகின் ‘நம்பா் ஒன்’ நாடாக மாற்ற இந்த முன்முயற்சியில் சேர முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.