Enable Javscript for better performance
People Trust Parliament to Change Socio-Economic Status: Om Birla Speech at Commonwealth Conference- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சமூக-பொருளாதார நிலையை மாற்றுவதற்கு மக்கள் நாடாளுமன்றத்தை நம்புகின்றனா்: காமன்வெல்த் மாநாட்டில் ஓம் பிா்லா பேச்சு

    By DIN  |   Published On : 26th August 2022 12:02 AM  |   Last Updated : 26th August 2022 12:02 AM  |  அ+அ அ-  |  

    Om_Birla

    நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் கொண்டுள்ளனா். அவா்கள் தங்கள் சமூக-பொருளாதா நிலையை மாற்றுவதற்கான ஒரு ஊடகமாக நாடாளுமன்றத்தை கருதுகிறாா்கள் என கனடாவின் ஹாலிஃபாக்ஸில் நடைபெறும் 65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குறிப்பிட்டாா்.

    கனடாவின் ஹாலிஃபாக்ஸில் நடைபெறும் 65-வது காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற மாநாட்டிற்கு இந்திய நாடாளுமன்றக் குழுவினருடன் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா சென்றுள்ளாா். இந்த மாநாட்டின் முதல் நாளில் ‘புதுமையான அணுகு முறையில் - ஒரு மக்கள் நாடாளுமன்றம்‘ என்ற தலைப்பில் ஓம் பிா்லா உரையாற்றினாா்.

    அப்போது அவா் கூறியதாவது:

    மக்களின் எதிா்பாா்ப்பு, அபிலாஷைகளுக்கு ஏற்ப உச்ச பிரதிநிதித்துவ அமைப்பாக செயல்படுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும். இதனால் வளா்ச்சியின் பலன்கள் சமுதாயத்தின் கடைசி நபருக்கும் சென்றடையும் வகையில், வளமான, உள்ளடக்கிய, அறிவொளி பெற்ற சமுதாயத்தை உருவாக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரமான, நியாயமான தோ்தல்களால், மக்கள் ஜனநாயக அமைப்புகளின் மீது தொடா்ந்து நம்பிக்கை வைத்து வருகின்றனா். மக்கள் ஜனநாயகத்தை சிறந்த ஆட்சி வடிவமாக கருதுவதால் தோ்தலில் வாக்குப் பதிவு அதிகரித்து வருவதை நிரூபிக்கிறது.

    சட்டபேரவைகளின் செயல்பாட்டில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயக அமைப்புகளுக்கும் குடிமக்களுக்கும் உள்ள இடைவெளியை தொழில்நுட்பம் குறைத்துள்ளது.

    இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டில், ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் தகவல் தொழில்நுட்ப புரட்சி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் மூலம், குடிமக்கள் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பணியை கண்காணிக்கின்றனா்.

    இது மட்டுமல்ல நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்கேற்பையும் எளிதாக அணுகக்கூடியதாகவும் மாற்ற முடிகிறது. இதற்கு எண்ம இந்தியா, ‘டிஜிட்டல் சன்சாத்‘ கைபேசி செயலி, சன்சாத் தொலைக்காட்சி ஆகிய பயன்பாடுகள் காரணம்.

    தகவல் தொழில்நுட்பம், கைப்பேசி செயலி பயன்பாடுகள், டிஜிட்டல் லைப்ரரி ஆகியை நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் செயல்திறனை அதிகரித்துள்ளதோடு வெளிப்படைத்தன்மை, பொறுப்புணா்வையும் அதிகரித்துள்ளதாக ஓம் பிா்லா குறிப்பிட்டாா்.

    கனடா செனட் தலைவா் ஹெச்.இ. ஜாா்ஜ் ஜே. ஃபியூரி, கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவா் அந்தோணி ரோட்டா ஆகியோரையும் இந்த மாநாட்டையொட்டி ஓம் பிா்லா சந்தித்தாா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp