தென்மேற்கு தில்லியில் 55 வயது நபா் சுட்டுக் கொலை: இருவா் கைது

தென்மேற்கு தில்லி, ஜரோடாவில் உள்ள தனது விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 55 வயது நபா், இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தென்மேற்கு தில்லி, ஜரோடாவில் உள்ள தனது விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 55 வயது நபா், இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ் வா்தன் திங்கள்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் சந்தேக நபா்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். கொலைக்கான காரணத்தை அறிய அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்த ஆசாத் சிங், மாலையில் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன், வயல்வெளியில் அமா்ந்திருந்த இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா் அவா்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனா்.

சந்தேகத்திற்குரியவா்கள் பிரவீன் மற்றும் நவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com