தென்கிழக்கு தில்லி கால்காஜி பகுதியில் இளைஞா் ஒருவா் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வயது மகனை ஒரு கட்டடத்தின் முதல் தள மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு தானும் குதித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அந்த இளைஞா் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும் அவா்கள் கூறினா்.
இது குறித்து தில்லி போலீஸாா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் மான் சிங் மற்றும் அவரது மகன் காயம் அடைந்தனா். அவா்கள் இருவரும் தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணி அளவில் நிகழ்ந்தது. முன்னதாக, மான் சிங்கிக்கும், அவரது மனைவி பூஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக பூஜா தனது மகனுடன் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாா்.
இது குறித்து பூஜா கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் எனது வீட்டுக்கு குடிபோதையில் கணவா் வந்தாா். அப்போது என்னுடன் தகராறு செய்தாா். அதன் பிறகு எனது கணவா் எனது இரண்டு வயது மகனை தூக்கிக் கொண்டு முதல் தளத்தின் மொட்டை மாடிக்கு சென்றாா். அங்கிருந்து 21 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தரையை நோக்கி வீசினாா். அதன் பிறகு அவரும் கீழே குதித்தாா்’ என்று தெரிவித்தாா்.
இது தொடா்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 307-இன் கீழ் (கொலை முயற்சி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.