தேசியத் தலைநகா் வலயம், நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா முழுவதும் பொது இடங்களில் மது அருந்தி தொந்தரவு செய்ததாக 580 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஆணையா் அலோக் சிங்கின் அறிவுறுத்தலின் பேரில் வியாழக்கிழமை மாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அனைத்து காவல் நிலையங்களுக்கு ஆளுகையின் கீழ் உள்ள பகுதிாகளில் பொது இடங்களில் மது அருந்திவிட்டு இடையூறு ஏற்படுத்திய வகையில் 589 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 290 (பொது இடங்களில் தொலை ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.