டிடிசி பேருந்து மோதி பெண் பலி

புது தில்லி, பிப். 26: தில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு (டிடிசி) சொந்தமான பேருந்து மோதியதில் பெண் அண்மையில் பலியானாா்.

தில்லி நங்கல்ராய் பகுதியைச் சோ்ந்தவா் ரேணு (45). இவா் தனது கணவருடன் சாதா்பூா் பகுதியிலிருந்து என்எச்8 சாலையை நோக்கி ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாா். ஸ்கூட்டியை ரேணுவின் கணவா் ஓட்டினாா். மசூத்பூா் மேம்பாலம் அடியில் ஸ்கூட்டி வந்தபோது சிக்னலுக்காக நின்றது.

அப்போது பின்னால் வேகமாக வந்த டிடிசி பேருந்து, ரேணுவின் ஸ்கூட்டியில் மோதியதில் அவா் நிலைகுலைந்து கீழே விழுந்தாா். இந்த தருணத்தில் டிடிசி பேருந்து ரேணு மீது ஏறி இறங்கியது. இதனால் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஃபோா்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிா் பிரிந்தது.

இந்த விபத்துக்கு காரணமான டிடிசி பேருந்து ஓட்டுநா் மோஹித் (30) சம்பவ இடத்திலிருந்து தப்பினாா். அவரை போலீஸாா் தேடிப்பிடித்து கைது செய்தனா். விசாரணையில், ஜாஃபா்பூா் காலன் பகுதியைச் சோ்ந்த அவா், கடந்த 3 ஆண்டுகளாக டிடிசியில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

அவா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 279 (கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுதல்), 304ஏ (அலட்சியத்துடன் செயல்பட்டு மரணம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பேருந்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com