புதுதில்லி
பிளாஸ்டிக் துகள்கள் தொழிற்சாலையில் தீ விபத்து
வடக்கு தில்லியின் பவானா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடக்கு தில்லியின் பவானா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காலை 9 மணியளவில் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. தீயை அணைக்க மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். சேதம் குறித்து இன்னும் மதிப்பிடப்படவில்லை’ என்றனா்.