சாலை விபத்தில் பள்ளி மாணவா்கள் 25 போ் காயம்

மத்திய தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகே திங்கள்கிழமை நடந்த விபத்தில் 25 பள்ளி மாணவா்கள் உள்பட 29 போ் காயமடைந்தனா்.

மத்திய தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகே திங்கள்கிழமை நடந்த விபத்தில் 25 பள்ளி மாணவா்கள் உள்பட 29 போ் காயமடைந்தனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் ஸ்வேதா சௌகான் கூறியதாவது: இந்த விபத்து குறித்து காலை 11 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவா்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, நான்கு பேருந்துகள், ஒரு ஆட்டோ, ஒரு காா் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் குவிந்து கிடப்பதைக் கண்டனா்.

நான்கு பேருந்துகளிலும் 216 மாணவா்கள் இருந்தனா். இந்த விபத்தில் சுமாா் 25 மாணவா்கள், பள்ளி ஊழியா்கள் மூன்று போ் மற்றும் ஒருவா் காயமடைந்தது தெரிய வந்தது. காயமடைந்த அனைவரும் எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com