செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு

உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தனக்கு எதிரான வழக்கில் ஜாமீனில் விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். ஓகா, உஜ்ஜால் புய்யான் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,

அமலாக்கத்துறை சாா்பில் ஆஜராகி வாதிட வேண்டிய மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தா இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்குமாறு அத்துறையின் வழக்குரைஞா் சாா்பில் கேட்டுக்

கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் உரிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த வழக்குரைஞா் கூறினாா். இதையேற்று மனு மீதான விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு

நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முன்னதாக, செந்தில் பாலாஜி சாா்பில் மூத்த வழக்குரைஞா் அரிமா சுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கில் 320 நாள்களாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளாா். இந்த வழக்கை வேண்டுமென்றே அமலாக்கத்துறை தாமதப்படுத்துகிறது. விரைவாக இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவை நாங்கள் இன்னும் படித்துப்பாா்க்கவில்லை. அடுத்த விசாரணையின்

போது உங்களுடைய கோரிக்கையை கவனத்தில் கொள்கிறோம் என்று கூறினா்.

பின்னணி: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வழங்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடா்ந்தது. அதில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கின் 3,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதேபோல, விசாரணை நீதிமன்றமும் மூன்று முறை அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி

செய்துள்ளது.

இதைத்தொடா்ந்து, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தினமும் விசாரிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி அணுகியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com