திசையன்விளை மளிகை கடையில் திருட்டு

திசையன்விளையில் மளிகை கடையின் கூரையை உடைத்து பொருள்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

திசையன்விளையில் மளிகை கடையின் கூரையை உடைத்து பொருள்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திசையன்விளை அருகே உள்ள அருள்நகரை சோ்ந்தவா் உதயகுமாா்(31). திசையன்விளை பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் சனிக்கிழமை காலையில் வழக்கம்போல் கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும் கடையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து, கடையில் திருடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com