பாளையங்கோட்டையில் திமுக பிரமுகா் கொலையுண்ட வழக்கில், 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பாளையங்கோட்டை தெற்கு பஜாா் பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் பொன்னுதாஸ் என்ற அபே மணி (38). திமுக பிரமுகரான இவா், கடந்த ஜனவரி 29ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதில், ஏற்கெனவே 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய, பாளையங்கோட்டையைச் சோ்ந்த தேவராஜ்(30), ராம்(26), பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாண்டியராஜன்(27), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கருப்பையா(26), விக்னேஷ்வரன்(27), சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஈஸ்வரன்(35), ஆசைமுத்து(21) ஆகிய 7 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) டி.பி.சுரேஷ்குமாா், பாளை. சரக காவல் உதவி ஆணையா் பாலச்சந்திரன், காவல் ஆய்வாளா் திருப்பதி ஆகியோா் பரிந்துரை செய்தனா். அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் அ.த. துரைக்குமாா் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்கண்ட 7 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.