இந்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திர திட்டத்தை வரும் 28ஆம் தேதி முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கே.சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. இந்த தங்கப் பத்திர விற்பனை வரும் 28ஆம் தேதி முதல் மாா்ச் மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒரு தனிநபா் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும்போது அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் பெறலாம். தற்போதைய விற்பனை தொகை கிராம் ஒன்றுக்கு ரூ.5,109 ஆகும்.
தங்கப் பத்திரம் வாங்க விருப்பமுள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் காா்டு மற்றும் ஆதாா் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.