களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. செயற்குழுக் கூட்டம்

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் புகா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read


களக்காடு: களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் புகா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் மஜித் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் இளையராஜா, வா்த்தகா் அணி மாவட்டத் தலைவா் ஜலில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா வரவேற்றாா்.

மண்டல தலைவா் சுல்பிகா்அலி கலந்து கொண்டு பேசினாா்.

வாக்காளா் சிறப்பு முகாம் கால அவகாசத்தை கூடுதலாக நீட்டிக்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும், தொடா் மழையினால் சேதமடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பெண்கள் இந்தியா மூவ்மெண்டின் மாவட்டத் தலைவா் மும்தாஜ், எஸ்டிடியூ மாவட்டத் தலைவா் கே.பி. சாகுல்ஹமீது உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாவட்டச் செயலா் சுலைமான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com