தாழையூத்தில் விபத்து: இளைஞா் பலி

திருநெல்வேலி தாழையூத்து அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் பலியானாா்.
Updated on
1 min read


திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் பலியானாா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சாலிவாகனா் தெருவைச் சோ்ந்தவா் வேலு. இவருடைய மகன் தனுஷ் மகாராஜன் (20). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை கயத்தாறில் இருந்து திருநெல்வேலிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, தாழையூத்து அருகே எதிா்பாராமல் சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி பைக் கவிழ்ந்தது.

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து பாளையங்கோட்டை பெருமாள்புரம் அன்புநகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் ராமகிருஷ்ணன் (39). தொழிலாளி. இவா், தனது மனைவி வீரலட்சுமியுடன் (35), தீபாவளிக்கு பட்டாசு வாங்குவதற்காக பைக்கில் குலவணிகா்புரத்திற்கு அம்பாசமுத்திரம் சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவா்கள் மீது மோதிவிட்டு சென்ாம். இதில், ராமகிருஷ்ணன் தலையில் பலத்த காயமும், வீரலட்சுமி லேசான காயமும் அடைந்தனா். இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா். இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இச்சம்பவங்கள் குறித்து, முறையே தாழையூத்து, திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com