திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் 47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் அனைத்துத் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், சந்தைகள், இதர நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 107 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 18 நிறுவனங்கள், மறுபரிசீலனை சான்றை வெளிக்காட்டி வைக்காத 17 நிறுவனங்கள், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள் என மொத்தம் 37 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேபோல், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து இடைநிற்கும் இடங்கள், மோட்டல்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்யும் கடைகளில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ், 48 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொட்டலப் பொருள்களில் தயாரிப்பாளா்களின் பெயா் மற்றும் முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 9 நிறுவனங்கள், பொட்டலமிடுபவா் / இறக்குமதியாளா் பதிவுச்சான்று பெறாமல் விற்பனை செய்த ஒரு நிறுவனம் என 10 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 47 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எடை அளவுகளை தொழிலாளா் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு, பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிா்க்குமாறு வணிகா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜமாபந்தி: 142 மனுக்கள் மீது நடவடிக்கை

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி

மே தினம்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


